அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
ஓம் அகத்தியர் பொன்னடி போற்றி !
ஓ அகமே! நின் அருளின்றி என் வினை அருப்பேனோ!
ஓ அகமே! நின் அருளின்றி என் ஆணவம் நீங்குமோ!
ஓ அகமே! நின் அருளின்றி என் அகங்காரம் அழியுமோ!
ஓ அகமே! நின் அருளின்றி என் குரோதம் தீருமோ !
ஓ அகமே! நின் கருணையின்றி என் மோட்ஷம் கிடைக்குமோ!
ஓ அகமே! நீயே எனது குருவாவாய்!
ஓ அகமே! நீயே எனது வினையும் ஆவாய் !
ஓ அகமே! நீயே என் மனம் ஆவாய்!
ஓ அகமே! நீயே எனக்கு எல்லாமும் ஆவாய் !
ஓ அகமே! நீயே எனக்கு அருளவேண்டுகிறேன்!
ஓ அகமே! நினது அருளால் மும்மலம்
அழியவேண்டுகிறேன்!
ஓ அகமே! நினது அருளால் சித்தம் தெளியவேண்டுகிறேன்!
ஓ அகமே! நினது கருணையினால் என் உள்ளத்தில் கருணை ஒங்க வேண்டுகிறேன் !
ஓ அகமே! உன்னையே சதாகாலம் போற்றும் பாக்கியம் நல்குவாய்!.
ஓ அகமே ! உன்னை போற்றுகின்றேன்!
ஓ அகமே ! உன்னையே வேண்டுகிறேன் !
ஓ அகமே ! உன்னையே யாசிக்கிறேன்!
ஓ அகமே ! நினதருள் வேண்டுகிறேன்!
ஓ அகமே போற்றி!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐
Old Post : அகத்தியர் பதினாறு போற்றிகள்:
https://guruarull.blogspot.com/2021/09/agathiyar.html
Visit for


No comments:
Post a Comment